முகப்பு
இந்தியா

'தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை இலங்கை உணர்ந்துகொள்ள வேண்டும்'

இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை உணர்ந்துகொள்ள பிரதமர் ராஜபட்சவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான காணொலி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
பகிர்:

இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் ராஜபட்சவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான காணொலி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவு ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்தது. இரு நாடுகளும் அந்த உறவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. எனது அழைப்பை ஏற்று உச்சிமாநாட்டில் கலந்துகொண்டமைக்கு நன்றி என்று கூறினார்.

அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையிலும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் இந்திய அரசு, இலங்கை அரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை உணர்ந்துகொள்ள முன்வரவேண்டும்'' என்று பிரதமர் மோடி கூறினார்.

இதில் பேசிய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, ''கரோனா காலத்தில் மற்ற நாடுகளுடன் பொதுநலத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

இலங்கையின் பிரதமாராக ஆகஸ்ட் 9-ஆம் தேதி பதவியேற்ற பிறகு இந்தியாவுடன் முதல் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்.

இலங்கை கடற்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்த எம்.டி. நியூ டைமண்ட் கப்பலில் இந்திய கடற்படையினர் சிறப்பான முறையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர்'' என்று ராஜபட்ச கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →