இந்தியாவில் கரோனா பாதிப்பு 11,933; பலி 392 ஆக உயர்வு: சுகாதாரத் துறை தகவல்
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,933 ஆகவும் பலி எண்ணிக்கை 392 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,933 ஆகவும் பலி எண்ணிக்கை 392 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2,687 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
தொடர்ந்து தில்லியில் 1,561 பேரும், தமிழகத்தில் 1,242 பேரும், ராஜஸ்தானில் 1,005 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.