பள்ளிக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: தில்லி அரசு
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று புது தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று புது தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள தனியார் பள்ளிகள் சில, கல்விக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் செலுத்துமாறு வலியுறுத்தியிருப்பதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, புது தில்லி துணை முதல்வர் சிசோடியா இன்று புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
Advertisement
அதில், தனியார் பள்ளிகள், மாதத்துக்கான கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்கலாம், அதே சமயம், ஒப்பந்த அடிப்படையில் மற்றும் முழு நேர ஊழியர்கள் அனைவருக்கும் மாத ஊதியத்தை முறையாக வழங்கி விட வேண்டும்.
கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, மாதக் கல்விக் கட்டணத்தைத் தவிர வேறு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்றும் சிசோடியா தெரிவித்துள்ளார்.