முகப்பு
இந்தியா

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2020 at 5:18 PM
பகிர்:

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 167 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அதில் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் சிவசேனை கட்சி நிர்வாகியும், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சுகாதாரக்குழு உறுப்பினருமான அமே கோல் தகவல் தெரிவித்தார். 

53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் பலர் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2,700 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,203. மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 223. மேலும், 507 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.