முகப்பு
இந்தியா

தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2003 ஆக உயர்வு

புது தில்லியில் நேற்று புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 2003 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2020 at 11:15 AM
பகிர்:


புது தில்லி: புது தில்லியில் நேற்று புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 2003 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், தில்லியில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. அதில் 38 பேருக்கு வேறு பல உடல் உபாதைகள் இருந்துள்ளன. விரைவு பரிசோதனை கருவிகள் மூலம் சோதனை செய்யும் பணி இன்று தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை, தில்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த குறைந்த வயதுடைய குழந்தை இதுவாகும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.