முகப்பு
இந்தியா

கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம் நீக்கம்

திருவனந்தபுரத்தில் யாருக்கும் கரோனா தொற்று இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம் நீக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2020 at 11:33 AM
பகிர்:

திருவனந்தபுரத்தில் யாருக்கும் கரோனா தொற்று இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம் நீக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இதில், தொடக்கத்தை விட தற்போது கேரளத்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது. கேரளத்தில் 481 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ள 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவனந்தபுரத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று ஏற்படாத நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம்நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.