முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 7,025 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 7,025 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 7,025 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அங்கு புதிதாக 7,025 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 89,675 ஆகியுள்ளது.

மேலும் 28 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,512 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8,511 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 50,010 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.