முகப்பு
இந்தியா

பஞ்சாபில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

பஞ்சாபில் நாளை முதல் பள்ளிகள் திறக்கபப்டும் என்று அறவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 4:57 pm IST
பஞ்சாபில் நாளை முதல் பள்ளிகள் திறக்கபப்டும் என்று அறவிப்பு வெளியாகியுள்ளது.
பகிர்:

சண்டிகர்: பஞ்சாபில் நாளை முதல் பள்ளிகள் திறக்கபப்டும் என்று அறவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநில அரசானது அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை நாளை (ஜனவரி 7) முதல் திறப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Advertisement

திறக்கப்படும் பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.

அதேபோல ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் முறையாக பின்பற்றுமாறு பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.