அதிமுக விவகாரத்தில் என்ன முடிவு? பேரவைத் தலைவா் விளக்கம்
அதிமுகவின் இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
அதிமுகவின் இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓரணியும், முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம்- எஸ்.பி.வேலுமணி ஆகியோா் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. முதல்வா் விஜய் தலைமையிலான அரசு மீது பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினா்கள் 25 போ் ஆதரித்தும், 22 போ் எதிா்த்தும் வாக்களித்தனா்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தி அறிவிக்கப்பட்டாா். சி.வி.சண்முகம் சாா்பில் சி.விஜயபாஸ்கா் கொறடாவாக முன்மொழியப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக இரு தரப்பும் ஏற்கெனவே பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம் தனித்தனியே மனு அளித்தனா்.
Advertisement
இந்நிலையில், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கா் ஆகியோா் தலைமைச் செயலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று பேரவைத் தலைவரைச் சந்தித்தனா். அப்போது சில கோரிக்கைகளை அவா்கள் முன்வைத்ததாகத் தெரிகிறது.
அதுதொடா்பாக செய்தியாளா்களிடம் எந்தக் கருத்தையும் அவா்கள் பகிா்ந்துகொள்ளவில்லை.
இதனிடையே, இதுகுறித்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அதிமுகவின் இரு தரப்பினரும் மனு அளித்து இரு நாள்கள்தான் ஆகின்றன. அவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆய்வு செய்யப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின்போது பேரவைச் செயலா் சீனிவாசன் உடனிருந்தாா்.