இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 43,183 பேருக்கு கரோனா 

DIN

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 43,183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவிலே தினசரி கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதனால் அங்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 43,183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,56,163ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 249 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 54,898ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 32,641 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,33,368ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,66,533 பேர் சிகிக்சையில் உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT