முகப்பு
இந்தியா

தில்லி எய்ம்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பியூஷ் கோயல் 

தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். 

Updated On : 1 ஏப்ரல், 2021 at 12:12 PM
piyush083853
பகிர்:

தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். 

45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டம் இன்று முதல் தொடங்குகிறது.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். 

Advertisement

கரோனா தடுப்பூசி http://cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இதுவரை மொத்தம் 6,51,17,896 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.