இந்தியா

ஏப்.10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

DIN

கர்நாடக மாநிலத்தில் 8 இடங்களில் ஏப்.10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
கா்நாடகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 6,570 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,40,130-ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,393 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாநிலத்தில் 9,73,949 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 53,395 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 36 போ் இன்று பலியாகியுள்ளனா். இதுவரை மொத்தம் 12,767 போ் பலியாகியுள்ளனர். இதனிடையே கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் 8 இடங்களில் ஏப்.10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உடுப்பி உள்பட 8 இடங்களில் ஏப்.10 முதல் 20ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதேசமயம் இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT