இந்தியா

கரோனா விதிமுறைகளை கடைப்பிடியுங்கள்; இல்லையேல்.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

DIN


தேர்தல் பிரசாரங்களின் போது கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள் இல்லையேல் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் ஒரு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் முகக்கவசம் அணியாமல், போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்தும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சியினரும், முகக்கவசம் அணிந்து, அவ்வபோது கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி, போதிய சமூக இடைவெளியை விட்டு தேர்தல் பேரணி மற்றும் பிரசாரங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT