மகாராஷ்டிரத்தில் புதிதாக 51,751 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 51,751 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 51,751 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 52,312 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 258 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,58,996 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,34,473 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 58,245 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய நிலவரப்படி 5,64,746 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறப்பு விகிதம் 1.68 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 81.94 சதவிகிதமாக உள்ளது.