கரோனா பரவல் எதிரொலியாக சீனிவாசமங்காபுரத்தில் பக்தா்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரோனா 2-ஆம் அலை பரவல் காரணமாக, சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு தரிசனத்துக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலில் நடக்கவுள்ள நித்திய கைங்கரியங்கள் அனைத்தும் தனிமையில் நடத்தப்பட உள்ளது. மேலும் திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலிலும் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஏப்.21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை உற்சவங்கள் தனிமையில் நடத்தப்பட உள்ளன.
22-ஆம் தேதி ஸ்ரீசீதாராமா் திருக்கல்யாணம், 23-ஆம் தேதி வரை ராமா் பட்டாபிஷேகம் உள்ளிட்ட உற்சவங்கள் தனிமையில் நடத்தப்பட உள்ளன. இவற்றில் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஏப்.19-ஆம் தேதி நடக்கவுள்ள வருடாந்திர புஷ்பயாகமும் தனிமையில் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.