முகப்பு
இந்தியா

'தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்' - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கேஜரிவால் கைகூப்பி வேண்டுகோள்

புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டாம் என்றும் தில்லி அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டாம் என்றும் தில்லி அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்றிரவு முதல் ஒரு வார முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  இன்று இரவு 10 மணி முதல் ஏப்ரல் 26 காலை வரை தொடர்ந்து ஒரு வாரம் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தில்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இதையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால், புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் தில்லியை விட்டு வெளியேற வேண்டாம். 6 நாள்களுக்கு மட்டுமே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சென்றால் உங்கள் பயணத்திற்கே இந்த நாள்கள் சரியாகிவிடும். எனவே, இங்கேயே இருங்கள். தில்லி அரசு உங்களை கவனித்துக்கொள்ளும் என்று கைகூப்பி கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், விருப்பமில்லாமல் வேறுவழியின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வியாபாரத்தில் இழப்புகளை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாக ஏழை மக்களுக்கு தினசரி கூலித்  தொழிலாளர்களுக்கு இந்த காலம் மிகவும் கடினம்.

எனினும் இந்த ஆறு நாள்களில் முழுமையாக கரோனா பரவலை ஒழிக்க முடியாது என்றாலும் ஓரளவுக்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →