இந்தியா

ராகுல்காந்திக்கு கரோனா தொற்று: விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்திக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து குணமடைய பிராத்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமீபத்தில் ராகுல் காந்தி மேற்குவங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அவர் மேற்குவங்கத்தில் பிரசாரத்தை தவிர்ப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT