‘லாபம் என்பது கெட்ட சொல் அல்ல’: தடுப்பூசி உற்பத்தி குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து
தடுப்பூசி உற்பத்தி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்றுள்ளார்.
இந்தியா‘லாபம் என்பது கெட்ட சொல் அல்ல’: தடுப்பூசி உற்பத்தி குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து
தடுப்பூசி உற்பத்தி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்றுள்ளார்.
தடுப்பூசி உற்பத்தி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்றுள்ளார்.
நாட்டில் முக்கிய மருத்துவர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதற்கு பிறகு தடுப்பூசி உற்பத்தி குறித்த புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச்சந்தை விற்பனைக்கும் அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை வரவேற்றுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா “புதிய கொள்கையின்படி, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியில் குறிப்பிட்ட பகுதியை திறந்த சந்தையில் முன்பே அறிவிக்கப்பட்ட விலையில் விற்க அனுமதிக்கிறது. லாபம் என்பது கெட்ட சொல் அல்ல. இது அதிக உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.