ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்கிறது: கேஜரிவால்
தில்லியில் கடந்த சில தினங்களை ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கடந்த சில தினங்களை ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தும் வரும் அதே சூழ்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக அந்தந்த மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜரிவால், தில்லி கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் எவ்வளவு ஆக்சிஜன் தேவை என மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. தில்லி அரசின் மதிப்பீட்டின்படி, இந்கு ஒரு நாளைக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதை 378 டன்களாக நிர்ணயித்து, தற்போது 480 டன்னாக உயர்த்தியுள்ளது. ஆக்சிஜன் அளவை உயர்த்தியதற்கு நன்றி. எனினும் இது எங்களுக்கு போதாது. தில்லி மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்கக் கோரி வருகிறது. இந்த பேரிடர் காலத்தில் மாநிலங்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.