பாட்னாவில் கங்கை ஆற்றில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள்.
பிகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள பிபபுல் எனும் இடத்தில் பாலத்தின் மீது இன்று காலை சென்ற ஜீப் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கங்கை ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 15 பேர் மாயமானார்கள்.
தகவல்அறிந்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் 9 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் மாயமானவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனபூர் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.