இந்தியா

உத்தரகண்டில் பனிச்சரிவு: 384 பேர் மீட்பு, 8 சடலங்கள் கண்டெடுப்பு

DIN

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 384 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

சமோலி மாவட்டத்தில் நீதி வேலியை ஒட்டிய இந்திய, சீன எல்லைப் பகுதியருகே வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. நித்தி பள்ளத்தாக்கில் சும்னா சௌகி என்ற இடத்தைத் தாண்டிய ஒரு இடத்தில் பனிப்பாறையின் சரிந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

விபத்து நிகழ்ந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை பற்றித் தெரிந்து கொள்ள முடியவில்லை.

பனிச்சரிவு நிகழ்ந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி, 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை 8 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. 

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT