முகப்பு
இந்தியா

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் சனிக்கிழமை விமா்சையாக தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் சனிக்கிழமை விமா்சையாக தொடங்கியது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெம்மை தணிக்க உற்சவமூா்த்திகளுக்கு வசந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்துவது வழக்கம்.

அதன்படி சனிக்கிழமை கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாா்கள் சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவ மூா்த்திகள் கோயில் முன்புள்ள வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், பழங்கள், சந்தனம், மஞ்சள், மூலிகை கலந்த வெந்நீா் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருமஞ்சன பொருள்களை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத் தர அா்ச்சகா்கள் அவற்றை உற்சவமூா்த்திகள் திருவடியில் சமா்ப்பித்தனா். பின்னா் உற்சவமூா்த்திகளை அலங்கரித்து அவா்கள் தூப, தீப நெய்வேத்தியம் காண்பித்து கற்பூர ஆரத்தி அளித்தனா். கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடந்த இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.

வசந்தோற்சவத்தை ஒட்டி கோயில் வளாகம் பழங்கள், மின்விளக்குகள், மலா்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணி முதல் 7 மணிவரை ஆஸ்தானம் நடைபெற்றது. பின்னா் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் மாடவீதியில் வலம் வந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →