உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பிறந்த இரட்டைக் குழந்தைகள் பலி 
இந்தியா

உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பிறந்து சில மணி நேரத்தில் இரட்டைக் குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பராபங்கியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. 

IANS

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பராபங்கியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. 

பராபங்கியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், பிறந்து சில மணி நேரத்தில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகளும் நிர்வாக அதிகாரிகளும் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆக்சிஜன் வழங்க மருத்துவ நிர்வாகம் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் வழங்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருவதாக உ.பி. அரசும், சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT