ஒடிசாவில் 6 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,599 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,599 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
ஒரேநாளில் 6,599 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,14,056 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று பாதித்து 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,977 ஆக உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,827 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 2,772 பேர் உள்ளூரிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தற்போது 49,075 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,62,931 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 39,642 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இதுவரை நாட்டில் 99.17 லட்சம் சோதனைகள் மேற்கொண்டுள்ளன.