இந்தியா

கரோனா தொற்று தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மகாராஷ்டிர முதல்வர் 

PTI

கரோனா தொற்றுநோயை "தேசிய பேரிடராக" அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராவத், 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க அந்நாட்டு முதல்வர்  வலியுறுத்தியுள்ளார். 

உத்தவ் தாக்கரே தலைமையில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை அனைவரும் கவனத்தில் கொண்டு, மகாராஷ்டிர அரசு மேற்கொள்ளும் வழிமுறைகளை நாட்டின் பிற இடங்களில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் மோடியுடனான முதல்வர்களின் சந்திப்பின்போது, தாக்கரே இதை வலியுறுத்தியுள்ளார். மேலும், தொற்றுநோயைச் சமாளிக்க மாநில அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்றார்.

புதன்கிழமை நிலவரப்படி நாட்டில் புதிதாக 63,309 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 44,73,394 ஆகவும், ஒருநாள் இறப்பு 985 ஆக உள்ள நிலையில் மொத்தம் இதுவரை 67,214 ஆகவும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT