இந்தியா

கர்நாடகத்திற்குள் நுழைய கரோனா சான்றிதழ் கட்டாயம்: ஏடிஜிபி

ANI

கர்நாடக மாநிலத்திற்குள் நுழைவதற்கு கரோனா சான்றிதழ் கட்டாயம் என மாநில ஏடிஜிபி பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக ஏடிஜிபி கூறுகையில், “மாநிலத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் மெதுவாக அதிகரித்து வருகின்றது. இந்த சூழல் தீவிரமடையாமல் தடுக்க, கர்நாடகத்திற்குள் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ அவரசத்திற்காகவும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT