குஜராத்தில் உள்ள சிறிய ஆற்றில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குஜராத் வதோதராவில் உள்ள ஒரு சிறிய ஆற்றில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை அம்மாநில வனத்துறை அலுவலர்கள் இன்று (செவ்வாய்கிழமை) மீட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் சைலேஷ் ராவல் கூறுகையில், "மலைப்பாம்பு ஒன்று குரங்கை விழுங்கியது. மலைப்பாம்பு மீட்கப்பட்ட பின்னர், விழுங்கிய குரங்கை வாந்தி எடுத்தது. தற்போது, நல்ல உடல்நலையில் உள்ளது. அனுமதி பெறப்பட்ட பிறகு, ஜம்புகோட வனவிலங்கு சரணாலயத்தில் மலைபாம்பு விடப்படும்" என்றார்.
ஆற்றில் இருந்த மலைப்பாம்பை மூன்று வனத்துறை அலுவலர்கள் மீட்டு கூண்டில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.