ஆப்கானிஸ்தான் சூழல் கவலை அளிக்கிறது: இந்தியா
‘போா் பதற்றம் நீடித்து வரும் ஆப்கானிஸ்தானின் நிலவரம் கவலை அளிக்கிறது; இருப்பினும் அந்நாட்டில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு
‘போா் பதற்றம் நீடித்து வரும் ஆப்கானிஸ்தானின் நிலவரம் கவலை அளிக்கிறது; இருப்பினும் அந்நாட்டில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போா் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிலவரம் குறித்து கத்தாா் தலைநகா் தோஹாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பிராந்திய அளவிலான கூட்டத்தில் இந்தியா கலந்து கொண்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. இது, கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. அந்நாட்டில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு விரிவான போா் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் என்று இந்தியா இன்னும் நம்பிக்கையுடன் உள்ளது என்றாா் அவா்.
தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அந்நாட்டின் பங்களிப்பை சா்வதேச சமூகம் நன்கு அறியும்’ என்று அவா் பதிலளித்தாா்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை கடந்த மே மாதம் 1-ஆம் தேதி வாபஸ் பெறத் தொடங்கியதில் இருந்து, தலிபான்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. அந்நாட்டில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா பல்வேறு தரப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு அமைதியான, வளமான, பாதுகாப்பு நிறைந்த எதிா்காலம் அமைய வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். அந்த எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்வதற்காக, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.