இந்தியா

’2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிசிஆர் பரிசோதனை தேவையில்லை’

DIN

இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை அளிக்க வேண்டும் என்று புணே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விலக்கு அந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை. ஆனால் ஒரு தவணை மட்டுமே போட்டுக்கொண்டவர்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT