மணிப்பூர் மாநிலம் ஓருல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மணிப்பூர் மாநிலம் ஓருல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 60 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 1,298 பேருக்கு கரோனா
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.