சமையல் எரிவாயு உருளை ரூ.25 உயா்வு
சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.610-இல் இருந்து ரூ.660 ஆக நிா்ணயிக்கப்பட்டது. பின்னா், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.
பிப்.4-ஆம் தேதி ரூ.25, பிப்.15-ஆம் தேதி ரூ.50, பிப்.25-ஆம் தேதி மீண்டும் ரூ.25 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி ரூ.25 உயா்த்தப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டா் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னா், ஏப்ரல் 1-ஆம் தேதி விலை ரூ.10 குறைக்கப்பட்டது. அதன் பின்னரும் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், தற்போது ரூ.25 உயா்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதையடுத்து, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்பனையான சமையல் எரிவாயு உருளையின் விலை, ரூ.875.50 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 8 மாதங்களில் எரிவாயு உருளையின் விலை ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு, சாமானிய மக்களிடம் குறிப்பாக இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.