இந்தியா

புணேவில் மோடிக்கு கோயில் கட்டிய ஆதரவாளர்

DIN

புணேவில் 37 வயதான மோடியின் ஆதரவாளர் ஒருவர் அவரின் மார்பளவு சிலையுடன் கூடிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள ஆந்த் பகுதியைச் சேர்ந்தவர் மயூர் முண்டே. 37 வயதான இவர் நில விற்பனை தொழில் செய்துவருகிறார். பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான முண்டே மோடிக்கு கோயில் கட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இதற்காக ஜெய்ப்பூரில் இருந்து சிவப்பு பளிங்கு கற்களை இறக்குமதி செய்து கோயிலை முண்டே கட்டியுள்ளார். பிரதமர் மோடியின் மார்பளவு சிலையுடன் கூடிய இந்த கோயில் ரூ. 1.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள முண்டே, “ ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, ராமர் கோயில் கட்ட நடவடிக்கை, முத்தலாக் பிரச்னை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதை கெளரவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT