முகப்பு
இந்தியா

நீதித்துறை வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திற்கு முதல் பெண் தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பி.வி. நாகரத்னா பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
கோப்புப்படம்
பகிர்:

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பி.வி. நாகரத்னா பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம், ஒன்பது நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னாவின் பெயரையும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.வி. நாகரத்னா. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நாகரத்னாவின் தந்தை இ.எஸ். வெங்கடராமையா, 1989 ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். ஹீமா கோஹி, பீலா திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதியாக பெண்களை நியமிக்க வேண்டும் என நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்துவருகிறது. மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலாக பொறுப்பு வகித்த பி.எஸ். நரசிம்மா, நீதிபதிகள் அபய் ஸ்ரீநிவாஸ் ஒகா, விக்ரம் நாத், ஜே.கே. மகேஷ்வரி, சி.டி. ரவிகுமார், எம்.எம். சுந்தரேஸ் ஆகியோரின் பெயர்களையும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியத்தின் பரிந்துரையின்படி, சீனியாரிட்டியின் அடிப்படையில் 2027ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நாகரத்னா பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →