நாடு முழுவதும் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள செய்தியில்,
கடந்த 24 மணிநேரத்தில் 18,73,757 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 17 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 55 நாள்களில் மட்டும் 10 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.