தாஜ்மகாலில் இரவு நேரப் பார்வையாளர்களுக்கு அனுமதி 
இந்தியா

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்: தாஜ்மகாலை இனி இரவிலும் ரசிக்கலாம்

கரோனா பரவல் காரணமாக தாஜ்மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவுநேர பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

DIN

கரோனா பரவல் காரணமாக தாஜ்மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவுநேர பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டது.  

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓர் ஆண்டு காலமாக தாஜ்மகாலில் இரவு நேரப் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (ஆகஸ்ட் 21) முதல் இரவு நேரப் பார்வைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மூன்று தவணையாக தலா 50 பேருக்கு மிகாமல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. தாஜ்மகாலில் இரவு நேரப் பார்வைக்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT