ஆப்கன் விவகாரம்: ஆக. 26இல் மத்திய அரசின் கூட்டத்தில் திருச்சி சிவா பங்கேற்பு
ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆகஸ்ட் 26இல் நடைபெறும் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்தில் திமுகவின் திருச்சி சிவா பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆகஸ்ட் 26இல் நடைபெறும் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்தில் திமுகவின் திருச்சி சிவா பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், ஆப்கனில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.
இதையும் படிக்க | தலிபான்களுக்கு எதிராகக் குரலெழுப்பும் உலகம்: ஆப்கனில் நடப்பதென்ன?
இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மாநிலங்களவை அவைத் தலைவருமான திருச்சி சிவா பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.