60 கோடியைக் கடந்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாடு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 60.24 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 60.24 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 66,22,337 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 60,24,25,271(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 22,73,78,071 இரண்டாம் தவணை - 2,22,21,573 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 12,52,27,082 இரண்டாம் தவணை - 5,05,58,615 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,44,32,720 இரண்டாம் தவணை - 4,28,95,238 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,55,095 இரண்டாம் தவணை - 82,70,913 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,11,679 இரண்டாம் தவணை - 1,27,74,285 |
| மொத்தம் | 60,24,25,271 |