முகப்பு
இந்தியா

காஷ்மீர் : 3 தீவிரவாதிகள் கைது

காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர்  கைது செய்யப்பட்டியிருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
காஷ்மீர் : 3 தீவிரவாதிகள் கைது
பகிர்:

காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர்  கைது செய்யப்பட்டியிருக்கிறார்கள்.

லாங்கேட் பகுதியில் கடந்த ஆக-16 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் அதில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அகமது தார் , ஜாம்செட் கான் , ஜாவித் அகமது கான் ஆகியோர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதோடு லக்சர் ஈ தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததையும்  ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இம்மூவர் மீதும் ஐபிசி பிரிவு  307 மற்றும் சக்திவாய்ந்த வெடிபொருளை வைத்திருந்ததிற்காக  சட்டம் 3/4 கீழும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அவர்களிடமிருந்து சில துப்பாக்கிகளும் , வெடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.