முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 63.09 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்

நாட்டில் இதுவரை 63.09 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் இதுவரை 63.09 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73.8 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனால் மொத்தமாக 63,.09 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 3,68,558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் விகிதம் 97.53% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரத்தையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →