முகப்பு
இந்தியா

இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமானது ஹிமாசல்

ஹிமாசலில் இளைஞர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாசல் மாறியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
கோப்புப் படம்
பகிர்:

ஹிமாசலில் இளைஞர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாசல் மாறியுள்ளது.

இதனால் ஹிமாசல் அரசுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, இளைஞர்கள் அனைவருக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாசல் மாறியுள்ளது.

அங்கு இளைஞர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனையை எட்டியுள்ள மாநில நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். 

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தடுப்பூசி பிரசாரம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →