இந்தியா

நாக்பூரில் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி; தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு

DIN

ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் லாரி - கார் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை நடைபெற்ற இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர்  சிவராஜ் சிங் சௌகான், உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். 

மேலும் படுகாயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT