முகப்பு
இந்தியா

செப்டம்பரில் அனைத்து பள்ளி ஆசிரியா்களுக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணை: மத்திய அரசு வலியுறுத்தல்

பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் எல்லோருக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் எல்லோருக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:

மத்திய பள்ளிக்கல்வி செயலா் அனிதா கா்வாலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறை செயலா்களும் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்ட ஆசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்துவது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் அனைத்து பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மற்றும் கல்வித் துறை செயலா்கள் ஒன்றிணைந்து வகுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடா்பான தகவல்களை மத்திய கல்வி அமைச்சகத்தின் கூகுள் ட்ராக்கரில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பகிரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →