அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் : என்சிஆர்பி 
இந்தியா

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் : என்சிஆர்பி

தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்  2021-நீங்கலாக கடந்த 2018-2020 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் முதலிடத்தில் இருக்கும்  மகாராஷ்டிரம் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 19,909 என தேசிய குற்றப் பதிவுத் துறை(என்சிஆர்பி) அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

இதில் 16,883 தற்கொலைகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தையும் , 14,578 தற்கொலைகளுடன் மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும் இருக்கிறது. 

2019-ஆண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் சதவீதம் 9.7-லிருந்து 11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

மேலும் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் 2018-2020 வரை தொடர்ந்து தமிழகம்  இரண்டாவது இடத்தில் இருப்பதும் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை அருகே நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! கல்பாக்கம் அருகே கரையைக் கடக்கும்!

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்... பயணிகள் சிக்கித் தவிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை நீடிக்கும்!

அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT