முகப்பு
இந்தியா

வலுவிழந்தது ஜவாத் புயல்

ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமானில் நவம்பா் 30-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பா் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது, வெள்ளிக்கிழமை மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. அந்தப் புயலுக்கு ஜவாத் எனப் பெயரிடப்பட்டது. 

அந்தப் புயல், ஆந்திரம், ஒடிஸா கடலோரப் பகுதி வழியாக நா்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) பிற்பகலுக்குள் புரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுவிழந்த ஜவாத் புயல் விசாகப்பட்டினம் அருகே 180 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →