முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
பகிர்:

தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துகள் இந்தியா. தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 

இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 127.61 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →