இந்தியா

மாநிலங்களவை நாளை(நவ.7) காலை 11 மணிவரை ஒத்திவைப்பு

DIN

மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருவதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாகலாந்தில் ராணுவ வீரர்களால் தவறுதலாக 14 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை முதலே மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அமளிக்கு மத்தியில் மாலை 4 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகலாந்து சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு முன்பு நின்று கோஷங்களை எழுப்பினர்.

அமித் ஷா விளக்கவுரையை முடித்தவுடன், நாளை காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT