FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

7 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் 'ஒமைக்ரான்' பாதிப்பு

புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 டிசம்பர் 2021, 5:48 pm IST
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரளில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இன்று (டிச.7) 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றில் ஒன்றை போட்டுக்கொண்டவர்கள். 

Advertisement

Advertisement

எஞ்சிய மூவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள். அதில் ஒன்றரை வயது குழந்தை, 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

வழக்கமான கரோனா பரிசோதனையின்போது இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் கடந்த மாதம் 18 முதல் 25-ஆம் தேதி வரை பின்லாந்து நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு 29-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments