இந்தியா

காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று(டிச.13) காவல்துறை பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 காவலர்கள் பலியானதோடு 11 காவல்கள் படுகாயம் அடைந்தனர். 

இந்தத் தாக்குதலுக்கு முன்பாக 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். தற்போது காவல் பேருந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிற நிலையில் இன்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெஹ்ராம்கலா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

பின் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலைத் தொடர்ந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

தற்போது இத்தாக்குதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் , ஏகே-43 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT