நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்தது!
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. இதில் 75% தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்த மத்திய. மாநில அரசுகளால் ஒவ்வொரு பகுதியிலும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் வயதானவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளன.
இதுபோன்ற பல்வேறு முயற்சிகளால் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் இரு தவணை தடுப்பூசிகளும் அடங்கும்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,82,079 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,37,67,20,359 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.