தில்லி திகார் சிறையில் 8 நாளில் 5 விசாரணைக் கைதிகள் மரணமடைந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திகார் சிறையின் கீழ் உள்ள வெவ்வேறு சிறைகளில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மரணங்கள் அனைத்தும் இயற்கையானவை என்றும் நேற்று சிறைக்கைதி விக்ரம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சிறைக் கைதிகள் மரணங்கள் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.